Thursday, October 13, 2011

சென்னை மேயர் கழக வேட்பாளர் - கழக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கோரி தென்சென்னை மாவட்ட தி.மு.க.சார்பில் திருவான்மியூரில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம்! தலைவர் கலைஞர் பேருரையாற்றுகிறார்!


தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து இன்று ( 14 - 10 - 2011)  மாலை திருவான்மியூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேருரையாற்றுகிறார்.
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெருவ தறிவோம். இத்தேர்தலில் திராவிட இன மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திட, நல்வாழ்வு தந்திட கழகம் தனித்தே போட்டியிடும் என தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த கால கழக அரசுகள் மாநிலத்து மக்களுக்கு ஆற்றிய எண்ணிலடங்கா நலப்பணிகளை மக்களிடம் எடுத்து ரைத்து களம் காண்பது என்ற நெஞ்சுரத்துடன் கழகம் இந்த தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு, இத்துணை வயதிலும் தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேருரையாற்றி வருகிறார்.

உழைப்பிற்கே ஒரு பெரும் உதாரணமாகத் திகழும் உத்தமத் தலைவர்!

உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமது எழுபதாண்டுகளுக்கும் மேலான நெடிய அரசியல் பொது வாழ்வில் ஓய்வு ஒழிச்சலில்லா உழைப்பினை சிந்தி தம்மையே இந்த இனத்திற்காக அர்பணித்துப் பாடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை திருவெற்றியூர் பெரியார் நகரில் திருவள்ளூர் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்போல் திரண்டிருந்த மக்களிடையே, கழக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வார்டு வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு ஏறத்தாழ ஒரு மணிநேரம் எழுச்சியுரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்.

Sunday, September 25, 2011

"ஜூனியர் காமராஜர்" சைதை துரைசாமி கூட அக்யூஸ்ட்டுதானா?

சென்னை மாநகர அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக "வாய்தா ராணி" ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சைதை துரைசாமி மீது பெண் ஒருவர் நில அபகரிப்பு புகார் கொடுத்தார். ஆனால் சைதை துரைசாமி அ.தி.மு.க. என்பதால் அவர் மீது ஒரு வழக்கு கூட "வாய்தா ராணி" ஜெயலலிதா போலீசார் பதிவு செய்யவில்லை. இதனால், அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமுதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி. மீதும், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார்.


அப்போது குமுதா சார்பாக வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, " அ.தி.மு.க. வைச் சேர்ந்த சைதை துரைசாமி மீது கடந்த ஏப்ரல் மாதம் நில அபகரிப்பு புகாரை குமுதா கொடுத்தார். இந்தப் புகார் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. எனவே, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி, "பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.







" கடந்த 5 மாதங்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நில அபகரிப்பு புகாரில் மற்றவர்கள் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்கள். அ.தி.மு.க. பிரமுகரான சைதை துரைசாமி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வரும் திங்கட்கிழமை போலீசார் பதில் அளிக்க இறுதி கெடு விதிக்கிறேன். ஏற்கனவே, மூத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்து இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு கெடு விதித்தேன். அப்போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என "வாய்தா ராணி" ஜெ. போலீசை கண்டித்தார்.

Sunday, September 4, 2011

தி.மு.க.முப்பெரும் விழா 30.9.2011

தி.மு.க.முப்பெரும் விழா 30 .9 .2011 அன்று
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்


2011 - ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வேலூரில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி தற்போது தேதி மாற்றம், இடமாற்றம் செய்யப்பட்டு, வருகிற 30.9.2011 - வெள்ளிகிழைமை, சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.


நாள் : 4 .9 .2011
தலைமைக் கழகம்
தி.மு.க.

தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமைக் கழக அறிவிப்பு
 
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் - அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கைது தொடர்பாகவும்;கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தலைமைக் கழகத்திற்கு தொடர்பு கொள்ளும் வகையில் பின்வருமாறு நியமனம் செய்யப்படும் தலைமைக் கழக பொறுப்பாளர்கள், தலைமைக் கழகத்தில் முழு நேரமும் பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்
 
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.
 
பெ.வீ.கல்யாணசுந்தரம்
 
ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி
 
அ.ரகுமான்கான்
 
வே.இரவி
 
இரா.கிரிராஜன்
 
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
 
க.அன்பழகன்
பொதுச்செயலாளர்
தி.மு.க.
"அண்ணா அறிவாலயம்"
சென்னை - 18
நாள் : 4 .9 .2011 

Friday, July 22, 2011

தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு - பொதுக்குழு கூடுகிறது : இன்றும் நாளையும் நடைபெறுகிறது !

இது குறித்து பொதுச் செயலாளர் பேராசிரியர்  வெளியிட்டுள்ள  அறிவிப்பு வருமாறு:-
 
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இன்று 
23 .7 .2011 (சனிக்கிழைமை) மாலை 4 .00 மணியளவில் 
தி.மு.க.செயற்குழு கூட்டம் மற்றும் நாளை 24 .7 2011  (ஞாயிற்றுக் கிழைமை) காலை 10 .00 மணியளவில்  தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோவை மாநகர், திருச்சி ரோடு, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அறிஞர் அண்ணா வளாகத்தில் நடைபெறும்.
 
அதுபோது தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 
பொருள் : கழக ஆக்கப் பணிகள்
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்
தி.மு.க.

Monday, July 11, 2011

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு

1993 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனத்திட மிருந்து,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 20 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் அரசுக்கு 6.5கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா உள்ளிட்ட 10பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் இணைந்து கூட்டாக சதி செய்து தரம் குறைந்த நிலக்கரியைத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இறக்குமதி செய்து பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அதன்பின், சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.ஆனால்,அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.சி.லகோட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை எதிர்கொள்ளும்படி ஜெயலலிதாவுக்கு ஆணையிட்டது.

Sunday, July 3, 2011

சில ஏடுகளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து - ஒரு விளக்கம்!

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் 
பொறியியல் கல்லூரியில் சேரலாம்
என்கிற விதிமுறையை கலைஞர் அரசுதான் அன்றைக்கு ஏற்படுத்தியது!
"எஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியதற்கு சென்னை ஐகோர்ட் தடை -ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி" என்று "தினத்தந்தி"நாளேடு கோட்டை எழுத்துகளில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள்,முதல் முறையாக பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தி.மு.க.அரசுதான்.

பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் என்று விதிமுறை ஏற்படுத்தியது தி.மு.க.அரசுதான்.

2008 - 2009 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க.அரசு அனைத்துப்  பிரிவினருக்கும்  குறைத்து  ஆணையிட்டதன்படி,பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 விழுக்காடு என்பதை 50  விழுக்காடு  எனவும் பிற்படுத்தப்பட்ட  கிறித்தவ வகுப்பினர்,பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம்  வகுப்பினர்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  மதிப்பெண்கள் 50 விழுக்காடு என்பதை 45 விழுக்காடு எனவும்-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 விழுக்காடு என்பதை 40 விழுக்காடு எனவும்-பட்டியல்  இனத்தவர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 விழுக்காடு எனவும் தி.மு.க.அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் 50 சதவிகிதமும், இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச்  சார்ந்த மாணவர்கள் 45 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்  என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் பொதுத் தேர்தலுக்கு முன்பே ஓர் அறிவிப்பினைச் செய்தது.

அந்த அறிவிப்பு வந்ததும்,தமிழக அரசின் சார்பில் தி.மு.க.அரசு இருந்தபோதே  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு -அதனை தமிழகத்தில்  இந்த ஆண்டு அமல்படுத்தமாட்டோம்  என்று முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்  அறிவித்ததோடு,மத்திய அரசுக்கு அது பற்றி திட்டவட்டமாக அப்போதே  தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜெயலலிதாதான் மத்திய அரசின் அறிவிப்பினை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததைப் போலவும், சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு விட்டது போலவும் செய்தி வெளியிட்டதோடு,  அதற்காக ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி  தெரிவித்ததாகவும் சில ஏடுகள் அதை மிகைப்படுத்தி  புகழ்ந்திருக்கின்றன.
ஆனால் இட ஒதுக்கீட்டின் கீழே பொறியியல் கல்லூரியில் நுழைய விரும்புகின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து அவர்களை அந்தக் கல்லூரியிலேயே பயில வசதி செய்தி கொடுத்தது தி.மு.க.அரசுதான் - முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தான் என்பதை அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

நன்றி : முரசொலி

Thursday, June 30, 2011

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு

 கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் அதிகபட்சமாக இரண்டு அடுக்கு  மாடிக் கட்டடங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால்  ஜெயலலிதாவும் அவரது அமைச்சரவைச் சகாக்களும் இனைந்து, அங்கு 7  மாடிகளைக் கொண்ட ஆடம்பர சொகுசு ஹோட்டலைக் கட்ட  அனுமதி  வழங்கினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரா.கிருட்டிணன்,பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு,கட்டட விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்ததற்காக  ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் 4'பேருக்கும் தனித் தனியாக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், மாநிலம் முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுல்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது, தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி என்ற இடத்தில், மாணவிகள் வந்த பேருந்தை மறித்து,தீ வைத்து அ.தி.மு.க.வினர் எரித்தனர். இதில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்திரி ஆகிய மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.பிளசன்ட் ஸ்டே வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார்.

Tuesday, June 28, 2011

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி மறுப்பு : மனமுடைந்த பயனாளி வீரகுமார் தீக்குளிப்பு!

இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவனூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி நிறுத்தப்பட்டதால் மனமுடைந்த ஏழைத் தொழிலாளி வீரக்குமார் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று  வரும் அவரை பல்வேறு முன்னணியினர் சந்தித்து  ஆறுதல்  கூறி வருகின்றனர்.
இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவநூரைச் சேர்ந்தவர் சி.வீரக்குமார். இவருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்பட்டு முதல்  தவணையாக ரூ. 10,900 மும் இரண்டாவது தவணையாக ரூ. 7,400 ம்  வழங்கப் பட்டது.கடன் வாங்கி வீடு காட்டியதாலும் மீதமுள்ள அரசுத் தொகை  நிறுத்தப் பட்டதாலும் மனமுடைந்த வீரக்குமார் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளித்தார். அதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்  அவரைக்  காப்பாற்றி இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  

சொம்பு தூக்கிகளுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறோம்

  • 'இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உடனடியாக  இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு  மத்திய  அரசு  உடனடியாக  நடவடிக்கையை  மேற்கொள்ள  வேண்டும் என்று  இச்சட்டப்பேரவை  வலியுறுத்துகிறது.
 
  • விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

  • ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம்,ராஜீவ் காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும்,அதன் தலைவர் பிரபாகரனும் சம்மந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு,பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்."

16-4-2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை சொம்பு தூக்கிகளுக்கு  நினைவுபடுத்த விரும்பிகிறோம்.

Tuesday, June 21, 2011

டான்சி நில ஊழல் வழக்கு

ஜெயலலிதா முதலைமச்சராக இருந்தபோது, தாம் பங்குதாரராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திர்க்காகத் தமது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடான வழிகளில் வாங்கினார். இதனால் அரசுக்கு 3 .5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு

தமிழகம் மழுவதும் உள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு 45 ,302 வண்ணத் 
தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கானஒப்பந்தம் அளிப்பதற்காக ரூ.8 .5 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

Monday, June 20, 2011

ஜெயலலிதா பல முதல்முதலுக்கு சொந்தக்காரர்!

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும் தமிழகத்தின் தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா பல முதல் முதலுக்கு சொந்தக்காரர்  ஆவார்.நடிகையாக இருந்த ஜெயலலிதாதான் அரசியல்வாதியாக மாறிய தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராவார்.அதே நேரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதலாவது முதலமைச்சரும் இவர்தான்!

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு மட்டும் 1996ஆம் ஆண்டில் மூன்று தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக மட்டும் 12 பெரிய ஊழல் வழக்குகள் இருந்தன.ஜெயலலிதாவின் நெருங்கிய  தோழி சசிகலா,முன்னாள் அமைச்சர்கள்,தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரின் மீது மொத்தம் 33வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய போராட்டமும் அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்புகளும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்கையை பெரிதும் பாதித்தன.இதில் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டும்,இன்னும் சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்!

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு,டான்சி நில ஊழல் வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, திராட்சை வருமானவரி வரி வழக்கு, மேனா விளம்பர, நிறுவன வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு மற்றும்   வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு. பிறகு சசிகலாவின் மேல்: அந்நியச் செலவாணி விதி மீறல் வழக்கு, ஜெஜெ டி.வி.வழக்கு. கறுப்புப் பண முதலீடு வழக்கு, வெளிநாட்டு முதலீடுகள் வழக்கு என மொத்தம் 12  வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டது.



ஒவ்வொரு வழக்கின் நிலையையும் தனித் தனி பதிவாக இடப்படும் (தொடரும்)









Wednesday, April 6, 2011

சரக்கிற்கு ஸ்பான்சரும் கேப்டன்தானோ?

விஜயகாந்த் நட்பால் நிதானம் இழந்த தினமணி ஆசிரியர்!
 
தமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 தான். ஆனால் நேற்றைய (5 .4 .11 )தினமணியில்,தமிழக சட்டமன்றத்தின்  மொத்த உறுப்பினர்கள் 240 பேர் என்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருக்கிறதே ஏன்?
 
சமீப காலமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தோடு தினமணி ஆசிரியர் நெருங்கிப் பழகி வருகிறார் போலும்!பழக்கதோஷம் அவரையும் நிதானமிழக்கச் செய்துவிட்டது போலும்!அதனால்தான் தலையங்கத்திலேயே தமிழக சட்டமன்றத் தொகுதியில் 240 பேர் இருப்பதாக நிதானம் தவறி எழுதிவிட்டார்.

Sunday, April 3, 2011

தா.பாண்டியனின் 'நிதானம்' மிகுந்த நெருங்கிய நண்பர்கள்!

"தோல்வி பயத்தால் முதல்வர் நிதானம் தவறிப் பேசுகிறார்"என்று  ஆம்பூர் தொகுதியில் குறிப்பிட்டிருக்கிறார் தா.பாண்டியன்!
 
எப்போதும் குடித்துவிட்டே,சட்டசபைக்குக் கூட குடித்துவிட்டே வருபவர் என்று விஜயகாந்தை ஜெயலலிதா அடையாளம் காட்டினார்.அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,எனக்கு ஊற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான் போலும் என்று நிதானமாக பதிலளித்தார்.
 
இப்போது தா.பாண்டியன் எங்கேயிருக்கிறார்?ஒரு பக்கம் 'குடிகாரர்' விஜயகாந்த்,இன்னொரு பக்கம் ஊற்றிக் கொடுக்கும் ஜெயலலிதா.
 
"உன் நெருங்கிய நண்பரால் யார் என்று சொல்.நீ யார் என்பதை நான் அடியாளம் சொல்வேன்"என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!அதன்படி பார்த்தால் இப்போது பாண்டியனின் நெருங்கிய நண்பர்கள் யார்?விஜயகாந்தும், ஜெயலலிதாவும் தானே!அவர் கலைஞரின் நிதானம் பற்றி பேசுகிறார்.அதைக் கேட்பவர்கள், படிப்பவர்கள் பாண்டியன் நிதானத்தில்தான்  அப்படிப் பேசினாரா என்று சந்தேகப் படத்தானே செய்வார்கள்!

Thursday, March 31, 2011

சாலை,பாலங்கள் மேம்பாட்டில் ஓர் ஒப்பீடு:


முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2001 - 06 ஆம் ஆண்டு வரை 5569 கோடி ரூபாய் செலவில் 46  ஆயிரத்து 17 கி.மீ.நீல சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன.ஆனால்,தி.மு.க.ஆட்சியில் 2006 -11 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 529 கோடியே 48 இலட்சம் செலவில் 65 ஆயிரத்து 886 கி.மீ.சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன.

2001 - 06 ஆம் ஆண்டு வரை 497 கோடி ரூபாய் செலவில் 871 பாலங்கள் மற்றும் 914 சிறு பாலங்கள்.
2006 -11 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 1 ,285 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1210 பாலங்கள்,4019 மிகச் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2001 - 06 இல் அ.தி.மு.க.ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலைகளின் எண்ணிக்கை வெறும் 6 மட்டுமே.ஆனால் 2006 -11 இல் தி.மு.க.ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலைகளின் எண்ணிக்கை 48 .தீட்டிய திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட
ஆதரிப்பீர்!உதயசூரியன்!!

சட்டம் படித்த ஜின்னாவா?'தூள்' சொர்ணாக்காவா? சிந்திப்பீர்!வாக்களிப்பீர்!!

ஒரு தொகுதி-இரு வேட்பாளர்கள்- ஓர் ஒப்பீடு

ஆயிரம்விளக்குத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நேற்று (24.3.11) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரது சொத்து விவரங்களில் வீடு, மனை, விளைநிலம் எதுவுமில்லை. அவர் மனைவி பெயரில் உள்ள சொத்துகள் ஒரு ஸ்கூட்டியும் பழைய டொயாட்டோ குவாலிஸ் காரும் ஆகும். ரொக்கப் பணம், நகை, இன்சூரன்ஸ் எல்லாமாக சேர்த்து அவரது சொத்து மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய்.5 ஆண்டுகாலம் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியும் ஜின்னா தன் பெயரிலோ மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலோ எந்தவித அசையா சொத்துகளையும் வாங்கவில்லை என்பதை அவரது சொத்து விவரங்களை அறிந்த கட்சிக்காரர்களே ஆச்சரியப்படுகிறார்கள். அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தாமல் நியாயமாக செயல்படுபவராக உள்ள இந்த இளைஞரை, முதல்வர்கலைஞரும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் சரியாகத் தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். இணையதளம் மூலமாக இந்த சொத்து விவரங்களை அறிந்த ஆயிரம்விளக்குத் தொகுதி படித்த வாக்காளர்கள்.

அசன் முகமது ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் 24ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நான்காவது அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்தது. அங்கே ஆஜராக வேண்டிய நிலையில், அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். வருமானத்திற்கு மீறி 1 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து குவித்தவழக்கில் ஏப்ரல் 21ந் தேதி , வளர்மதி ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வளர்மதி மீது தாமஸ்மலை காவல்நிலையத்தில் வெடிபொருள் வழக்கும் (குற்ற எண்-775/06) நிலுவையில் உள்ளதை அவரது வேட்புமனு சுட்டிக்காட்டுகிறது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் வாக்காளர்கள் இரண்டு வேட்பாளர்களையும் எடைபோட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!!
நமது சின்னம் உதயசூரியன்!!!

Wednesday, March 30, 2011

தா.பாண்டியன் : அன்றும் இன்றும்

ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காவல்துறை வாகனங்களிலேயே பணத்தை கடத்தி செல்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இன்று ஜெயலலிதாவை பாண்டியன் பாதபூசை செய்து கொண்டிருக்கிறார்.ஆகவே அவர் இப்படியெல்லாம் ஜெயலிதாவை புகழ்ந்து கலைஞர் ஆட்சியை இகழ்ந்து பேசுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செரீனா என்ற இளம்பெண்ணின் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டது.செரீனா கஞ்சா விற்றதாக போடப்பட்ட அந்த வழக்கின்போது செரீனா வீட்டில் புகுந்த போலீசார் 35 இலட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றது.அந்தத் தொகை ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் சொந்தமானது என்றே போலீஸ் பறித்து சென்றதாக அன்றைய ஏடுகள் எல்லாம் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் செரீனா போட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதீமன்றம் செரீனா வீட்டில் போலீசார் கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துசென்ற பணம் செரீனவுக்கே சொந்தமானது.போலீசார் அந்த பணத்தை செரீனாவிடமே திருப்பித் தரவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

ஊரார் வீட்டு பணத்தை முதலமைச்சருக்கு சொந்தமானது என்று பொய் குற்றம்சாட்டி காவல் வாகனத்தில் கைப்பற்றிச் சென்ற அதே போலீஸ் வாகனத்தின் மீதுதான் இன்று ஜெயலலிதாவின் கொத்தடிமை தா.பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.

2006 -ஆம் தேர்தலின்போது எந்த தி.மு.க. கூட்டணியில் பாண்டியனின் கட்சி போட்டியிட்டதோ அப்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்த இதே பாண்டியன் மேடைக்கு மேடை பேசியதை எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறார் போலும் தா.பாண்டியன்.அன்று அவருக்கு தி.மு.க.  தேர்தல் அறிக்கை தேனாக இனித்தது.காரணம் தி.மு.க.விடம் இருந்து 10 சீட்டுகளை பிச்சை பெற்றிருந்தார்.அவர் இன்று ஜெயலலிதாவிடம் 10 சீட்டுகளை பிச்சையாகப் பெற்றுக் கொண்டார்.அதனாலேதான் தி.மு.க தேர்தல் அறிக்கையை கேலி செய்கிறார்.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்.இதனைத்தான் காலத்தின் கோலம் என்பார்கள்?"

Thursday, March 24, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1971 முதல் 1976 வரை


தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்


1971 முதல் 1976 வரை
  •  
  • இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  •  அரசு ஊழியர் குடும்பப் பாது காப்புத் திட்டம்
  •  அரசு அலுவலர் இரகசியக் குறிப் பேட்டு முறை ஒழிப்பு
  •  மீனவர்களுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம்
  •  சிறார்களுக்கு ஆலயங்களில் கருணை இல்லங்கள்
  •  சேலம் உருக்காலைத் திட்டம்
  •  15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று நில உச்ச வரம்புச் சட்டம்
  •  நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம்
  •  தூத்துக்குடி ரசாயன உரத் தொழிற்சாலை
  •  சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ)
  •  சிப்காட் வளாகங்கள்
  •  தமிழ் பேசும் முஸ்லிம்களைப் போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
  •  புன்செய் நிலவரி அறவே நீக்கம்
  •  மக்கள் குறை தீர்க்கும் மனுநீதித் திட்டம்
  •  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
  •  கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
  •  பசுமைப் புரட்சித் திட்டம்.

Wednesday, March 23, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1969 முதல் 1971 வரை

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்
1969 முதல் 1971 வரை

  • பேருந்துகள் நாட்டுடைமை
  • போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்
  • அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்
  • 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம்
  • குடிசை மாற்று வாரியம்
  • குடிநீர் வடிகால் வாரியம்
  • கண்ணொளி வழங்கும் திட்டம்
  • பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள்
  • ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்
  • குடியிருப்பு மனை மற்றும் பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டங்கள்
  • இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர் ஆணையம்  அமைத்தது
  • பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த் தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டி லிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 16  விழுக்காட்டி லிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது
  • புகுமுக வகுப்பு வரையில் அனை வருக்கும் இலவசக் கல்வி
  • மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை
  • நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை

Tuesday, March 22, 2011

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள் 1967 முதல் 1969 வரை

தி.மு.க.ஆட்சியின் சாதனைகள்
1967 முதல் 1969 வரை
  • "மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு "தமிழ்நாடு"என்ற பெயர்
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்
  • தமிழ்,ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம்
  • அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பைச் சரணளித்து ஈடான ஊதியம் பெறும் "ஈட்டிய விடுப்பு சரணளிப்பு"திட்டம்

                                                                                                                                         தொடரும்..

தலைவர் கலைஞர் நிகழ்சிகள்

 23 -3 -2011
மாலை 6 மணி - திருவாரூர்
தேர்தல் பிரசாரத் தொடக்க விழாப் பொதுக்கூட்டம்
 
24 -3 -2011
காலை 11 மணி திருவாரூர் வேட்பு மனுத் தாக்கல்
மாலை 6 மணி - தஞ்சாவூர்
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
25 -3 -2011

மாலை 6 மணி  திருச்சி
தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்.

திருவாரூரில் கலைஞர் பிரச்சாரம்.

திருவாரூரில்  தலைவர் கலைஞர்  உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நாளை (புதன்கிழமை 23 -03 -11) அன்று  நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் நாளை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார். இதற்காக திருவாரூரில் தெற்கு வீதியில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு மாவட்ட எல்லையான குமாரமங்கலத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

"திமுக Vs அதிமுக" நேரடி மோதல்!

சட்டசபைத் தேர்தலில் திமுக 119 இடங்களிலும், அதிமுக 160 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதில் திமுகவும் அதிமுகவும் 84 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரம்:


தொகுதிகள் -திமுக வேட்பாளர்-அதிமுக வேட்பாளர்


1. ஆயிரம் விளக்கு- அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை- மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர்- பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம்- க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி)-மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர்- இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர்- ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம்- டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10.திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம்- தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம்- எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர்- பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி- துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை- ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர்- எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17. திருவண்ணாமலை- ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18. கீழ்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19. வந்தவாசி (தனி)- கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20. வானூர் (தனி)- புஷ்பராஜ் - ஜானகிராமன்
21. விழுப்புரம்- க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22. சங்கராபுரம்- உதயசூரியன் - மோகன்
23. கடலூர்- புகழேந்தி - எம்.சி.சம்பத்
24. குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25. திருவிடைமருதூர்- கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26. கும்பகோணம்- க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27. திருவையாறு- கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28. தஞ்சாவூர்- எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29. ஒரத்தநாடு- மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30. மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31. திருவாரூர்- மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32. நன்னிலம்- இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34. திருச்சி மேற்கு- கே.என்.நேரு - மரியம்பிச்சை
35. திருச்சி கிழக்கு- அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36. மணச்சநல்லூர்- என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37. துறையூர் (தனி)- பரிமளா தேவி - இந்திராகாந்தி
38. பெரம்பலூர் (தனி)- எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39. அரவக்குறிச்சி- கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40. கிருஷ்ணராயபுரம்- பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41. குளித்தலை- மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42. கந்தர்வக்கோட்டை- கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43. விராலிமலை- எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44. ஏற்காடு (தனி)- தமிழ்செல்வன் - பெருமாள்
45. சங்ககிரி- வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46. சேலம்- தெற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47. வீரபாண்டி- வீரபாண்டி ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48. சேலம் மேற்கு- இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49. ராசிபுரம் (தனி)- வி.பி.துரைசாமி - ப.தனபால்
50. குமாரபாளையம்- வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51. பாப்பிரெட்டிபட்டி -முல்லைவேந்தன் - பழனியப்பன்
52. மேட்டுப்பாளையம்- அருண்குமார் - சின்னராஜ்
53. கவுண்டம்பாளையம்- சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54. கோவை வடக்கு- வீரகோபால் - மலரவன்
55. கோவை தெற்கு- பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56. கிணத்துக்கடவு- மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57. தாராபுரம் (தனி)- ஜெயந்தி - பொன்னுசாமி
58. திருப்பூர் வடக்கு- கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59. மடத்துக்குளம் -மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60. அந்தியூர்- என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61. மேலூர்- ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62. மதுரை கிழக்கு- மூர்த்தி - தமிழரசன்
63. திருமங்கலம்- மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64. மதுரை மேற்கு தளபதி - செல்லூர் ரா ஜு
65. பழனி செந்தில்குமார் - வேணுகோபாலு
66. ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67. நத்தம்- விஜயன் - இரா.விஸ்வநாதன்
68. ஆண்டிபட்டி- எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69. போடிநாயக்கனூர்- லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70. முதுகுளத்தூர்- சத்தியமூர்த்தி - மு.முருகன்
71. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72. மானாமதுரை (தனி)- தமிழரசி - குணசேகரன்
73. ராஜபாளையம்- தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74. சாத்தூர்- கடற்கரை ராஜ் - உதயகுமார்
75. சிவகாசி- வனராஜா - உதயகுமார்
76. அருப்புக்கோட்டை- சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77. சங்கரன்கோவில்- உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78. ஆலங்குளம்- பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79. திருநெல்வேலி- ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80. அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81. தூத்துக்குடி- கீதா ஜீவன் - ஏ.பால்
82. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83. கன்னியாகுமரி- சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84. நாகர்கோவில்- மகேஷ் - நாஞ்சில் முருகேசன்.

Monday, March 21, 2011

விஜயகாந்துக்கு எதிராக நடிகர் வடிவேலு

விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.    புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார்.   அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல்.விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்.  குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார்.
இதையடுத்து நடிகர் வடிவேலு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

அன்பு சகோதரியின் அன்பு : வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்

கேட்ட சீட் தராமல் அவமானப்படுத்தியதால் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்யிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது மதிமுக.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வைகோவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,  ‘’மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது.  தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு  எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும்  எப்போதும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?

 நாள்,வார ஏடுகள் சிலவற்றை எடுத்துக் கொள்வோம். தினமலர், தினமணி, ஆனந்த வ்கிடன்,ஜூனியர் விகடன்.குமுதம் ரிப்போர்ட்டர்,துக்ளக்,கல்கி முதலான சில ஏடுகள் தொடர்ந்து தி.மு.க.வையும்,திராவிட இயக்கத்தையும்,கலைஞரையும் தாக்கி எழுதி வருகின்றன.எப்படியாவது மீண்டும் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று துடிக்கின்றன.என்ன காரணம்?
 
மேலே குறிப்பிடப்பட்ட ஏடுகளின் வரிசையை மீண்டும் ஒருமுறை உற்று கவனித்தால் உண்மை புரியும்.அனைத்து ஏடுகளின் ஆசிரியர்களையும் ஒரு 'நூல்' இணைப்பது தெரிகிறதா?அந்த நூலுக்குப் 'பூணூல்'என்று பெயர்.தினமலர் ரமேஷ்,தினமணி வைத்தியநாதன்,விகடன் சீனிவாசன்,ரிப்போர்ட்டர் வரதராஜன்,துக்ளக் சோ,கல்கி ராஜேந்திரன் அனைவரும் பார்ப்பனர்கள்.அவாள் அனைவரும் ஒன்றுகூடி,அவாளில் ஒருவரைத் தமிழக முதல்வராக ஆக்க விரும்புவது இயல்புதானே!
 
அவர்களிடம் உள்ள 'இனப்பற்று' நம்மிடம் இல்லையே என்பதுதான் வேதனைக்குரியது.பார்ப்பனர் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என்று அவர்கள் விரும்போது,'தமிழாய்ந்த தமிழன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்'என்று நாம் விரும்பக்கூடாதா?
 
இது வெறும் தேர்தல் மட்டுமன்று.ஒரு வகையான சித்தாந்தப் போரும் ஆகும்.எனவேதான் இதனை ஆரிய திராவிடப் போர் என்கிறோம்  நாம்.'ஆம் இது ஒரு பரம்பரை யுத்தம்' என்று ஜெயலலிதாவும் ஒப்புக்கொள்கிறார். இந்தப் போரில் நாம் எந்தப் பக்கம்?
 
'நான் பெரியாரின் விரல் பிடித்து நடந்தவன்' என்று கூறும் கலைஞரின் பக்கமா?'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?
 
பத்தாம் வகுப்பு வரை,தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதோடு,பொறியியல் கல்லூரிகளிலும்,தமிழ்வழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கலைஞரின் பக்கமா?ஆங்கிலக் கல்விதான் சிறந்தது என்று அறிக்கைவிட்ட  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்பட்டிருப்பது கலைஞர் அரசில்தான்.இது தமிழுக்கும்,தமிழருக்கும் பொற்காலம் என்று ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களே பாராட்டுவதைப் பார்க்கின்றோம்.
 
மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழின் பெருமையை உலகறியச் செய்த கலைஞரின் பக்கமா?கண்ணகி  சிலையை  கூட, காணாமல்  அடித்த  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழறிஞர்களின் நூல்களையெல்லாம் தொடர்ந்து நாட்டுடைமை  ஆக்கி வரும் கலைஞரின் பக்கமா?தமிழின உணர்வாளர்களையும்,தமிழ் அறிஞர்களையும் சிறையில் அடித்த ஜெயலலிதாவின் பக்கமா?
 
இஸ்லாமியப் பெருமக்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடும்,அருந்ததியப் பெருமக்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கிய கலைஞரின் பக்கமா?சிறுபான்மையினருக்கு ஆந்திர அரசு இட ஒதுக்கீடு  வழங்கியதையே  கொச்சைப்படுத்திப் பேசிய ஜெயலலிதாவின் பக்கமா? 
 
இவை போன்ற ஆயிரம் உண்மைகளை உலகுக்குச் சொல்லவேண்டிய ஊடகங்கள் தவறான பரப்புரைகளின் ஆகலாமா? ஆகவே
சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!!
நமது சின்னம் உதயசூரியன்!!!
 

Tuesday, March 1, 2011

தமிழக சட்டசபை தேர்தல் தேதி : ஏப்ரல்-13

 தமிழகம், புதுச்சேரி,கேரளம்,  மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின்  தேர்தல் தேதியை  டெல்லியில் இன்று மாலை  தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே-16ம் தேதியுடன் முடிவடைகிறது.   இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் -13 ம் தேதி ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். தமிழகத்தில் மார்ச் 19ம் தேதிவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்,  மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார். தமிழகத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 54 ஆயிரம்.   தமிழகத்தில்  மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 13, 2011

ஒரு தொண்டனுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மகள் திருமணம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். துணை முதல்வரின் வருகையையொட்டி வேப்பூரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டர்களிடம் சால்வைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

அப்போது ஒரு தொண்டர் ஒரு வெள்ளைத்தாளை மடித்து கொடுத்துள்ளார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர்,அந்த வெள்ளைத்தாளை பிரித்து படித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அதில், ஒரு நிமிடம் பேசவும் என்றும், ஒரு செல்போன் எண்ணும் எழுதியிருந்தது.
உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின், நான் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்றதும், சற்றும் எதிர்பாராத அந்த திமுக தொண்டர் வார்த்தைகள் வராமல் கதறி அழுதார்.
பின்னர் தான் ஒரு திமுக தொண்டர் என்றும், தன்னுடைய பெயர் பொன்முடி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
உங்கள் கோரிக்கையை நிதானமாக கூறுங்கள் என்ற துணை முதல்வர் ஸ்டாலினிடம், தான் இருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிராமத்திற்கு தாங்கள் கொடியேற்ற வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனை பொறுமையுடன் கேட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக நேரம் ஒதுக்கி இருமாத்தூர் கிராமத்திற்கு கழக கொடி ஏற்ற வருகிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்றார்.
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

நன்றி
நக்கீரன்.

Thursday, February 10, 2011

அன்றைய ஜெயலலிதாவும் இன்றைய மாயாவதியும்.

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் ஷூவை அவரது பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி.ஒருவர் தனது கை குட்டையால் துடைத்து சுத்தம் செய்தார் எனக் குற்றம் சாட்டப்படுகிறதே?
91ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனா போது தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்த சபாநாயகர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஜெயலலிதாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா  எம்.எல்.ஏ.வாக  இல்லாத  நிலையிலும் அவைக்குள் அனுமதிக்கப்பட்டு துணை சபாநாயகர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார்.இப்போது பாதுகாப்பு டி.எஸ்.பி.,உ.பி. முதல்வர் மாயாவதியின் ஷூவை துடைத்தார் என்று கூக்குரலிடும் ஏடுகள் எல்லாம் அன்றைக்கு ஜெயலலிதா காலில் அவைக்குள்ளேயே  சபாநாயகர் விழுந்து வணங்கியது  பற்றி மூச்சு விட்டதுண்டா?இல்லையே ஏன்? 

Sunday, January 30, 2011

வெற்றிகொண்டான் மறைவு - கலைஞர் இரங்கல் கவிதை!!

காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து
கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த
சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது
ஆம்; நமது வெற்றிகொண்டானை
சாவு பற்றிக் கொண்டு விட்டது
தம்பீ வெற்றி,
உன்னைத் தோள் மீது
தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு
தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும்
அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து
எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்?
அன்பைப் பிழிந்து கொடுக்க
உன் அண்ணன் நானிருக்க
ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள்
உன் வருகைக்காக காத்திருக்க
வண்ணமிகு சொல்லடுக்கால்
சுயமரியாதை எண்ணங்களை
தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி
தொகை தொகையாய் பகை வீழ்த்தும்
போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே
சொல்லழகைக் கணையாக பூட்டி
மேடையில் நிமிர்ந்து நிற்கும்
உன் வில்லழகைக் கண்டு
நான் வியந்து போற்றிய
காலமெல்லாம் இனி வீண்தானோ?
வார்த்தை சித்தனே
வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே
எம் உயிரெல்லாம் நடுநடுங்க
எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்?
நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்
நான் நம்பவில்லை
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
உன் எக்காளக் குரல்
எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது
மறைந்துவிட்டாய் நீ என்பது
நம்ப முடியாத வார்த்தைக் கோவை
இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு
அண்ணாவோடு
அவர்தம் தம்பியராம் எங்களோடு

Saturday, January 29, 2011

கழகத்தின் மூத்தப் பேச்சாளர் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் :(

 தனது அனல் மட்டுமல்ல அணுக்கள் தெறிக்கும் பேச்சினாலும் கழகத்தின் எதிரிகளையும்,அந்த எதிரிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும்
இயக்கிவந்த பார்ப்பனர்களையும் எதிர்த்து குரல் கொடுத்து வந்த அன்பு மாமா 
வெற்றிகொண்டான் காலமானார் என்ற செய்திகேட்டு.. 
சேகர்பாபு கழகத்தில் இணைந்த மகிழ்ச்சியையும் தாண்டிஅத்தனை சோகம் மனதிற்குள்.
பார்ப்பன வெறியர்களான ஜெயலலிதாவிற்கு எதிராகவும்,சங்கராசாரியர்களுக்கு எதிராகவும் தன்னுடைய கருத்துக்களை தனக்கே உரிய நையாண்டியோடும்,நகைச்சுவையோடும் எளிய மக்களுக்கு
கொண்டு சேர்த்ததில்அவர்க்கு இணை எவருமில்லை.கழக கூட்டங்களிலும்,எத்தனை பெரிய மாநாடு
என்றாலும் அந்த கூட்டங்களில் அரசியல் வரலாறுகளை நினைவு கூறுவது அவரது பேச்சுகளின் சிறப்பு.கலைஞர் அவர்கள் இந்திராகாந்தி,ராஜாஜி,காமராசர் மற்றும் அனைத்துலக தலைவர்களிடம் ஆடிய அரசியல் விளையாட்டுகளை மக்களிடத்திலே தன் வாழ்நாள் முழுதும் பரப்பியவர்.ஆக பல கூட்டங்களில் அவர் வெளிப்படுத்திவந்த தன் வாழ்நாள் ஆசையை இன்று இயற்கை நிவர்த்தி செய்தது. 
  

இது ச்சும்மா ட்ரைலர்தான்!!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை நிறைவேற்றியுள்ள திட்டங்களில் பலனடைந்தவர்கள் விவரம்:

* ரூ.7,000 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி - 23 லட்சம்

* ஒரு ரூபாய் அரிசி திட்டம் - ஒரு கோடியே 88 லட்சம்

* கலர், "டிவி' திட்டம் - ஒரு கோடியே 50 லட்சம்

* 37 நலவாரியங்களில் உறுப்பினர்கள் - 2 கோடியே 14 லட்சம்

* கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு கோடியே 34 லட்சம்

* அரசு ஊழியர்கள் சம்பள கமிஷன் அமல் - 13 லட்சம்

* பென்ஷன் பெறுவோர் - 6 லட்சம்

* புதிதாக அரசு வேலை பெற்றவர்கள் - 5 லட்சம்

* பணி வரன்முறை - 3 லட்சம்

* முதல் தலைமுறை பட்டதாரிகள் கட்டண சலுகை - 80 ஆயிரம்

* தனியார் வேலைவாய்ப்பு - 1 லட்சத்து 50 ஆயிரம்

* திருமண உதவித் திட்டம் - 3 லட்சம்

* முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை - 22 லட்சத்து 26 ஆயிரம்

* கான்கிரீட் வீடு - 2 லட்சத்து 50 ஆயிரம்

Thursday, January 27, 2011

தமிழக மீனவரின் குடும்பத்திற்கு அரசு பணி.

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு பணிக்கான நியமன உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த 22-ம் தேதி இலங்கை கடற்படைக் கும்பலால் கொடூரமாக கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டார்.

இலங்கைப் படையினரின் இந்த வெறிச் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பித்த அன்றே ஜெயக்குமார் மனைவியிடம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது.

அன்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம்பவம் குறித்து முதல்வர் தெரிவித்தார். இது போன்று தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி ஜெயக்குமார் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார். அந்த உத்தரவின்படி முருகேஸ்வரிக்கு ஆறுகாட்டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்ட பணி உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து வழங்கினார்.

Thursday, January 20, 2011

அப்போ சீமான் என்ன புட்டிபால் குடித்துக்கொண்டிருந்தாரா...?

சமீபத்தில் திரைப்பட இயக்குனர்,மற்றும் குணச்சித்திர நடிகரும்,'நாம் தமிழர்' இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சீமான் & ஜெயா குழுமத் தொலைகாட்சிக்காக நேர்காணல் நடத்துனர் ராபிபெர்னாட்டுக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார்.
லையின் பேன் கடித்தால்கூட அனுமதி பெற்றுதான் சொரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும்,சம்பளம் போதவில்லை என்றும் தான் ரபிபெர்னாட் தன் பணி இருப்பிடத்தை மாற்றினார்.நிலா தொலைகாட்சியின் பங்குதாரராகி கையைச் சுட்டுக்கொண்டார்.இவரை மிகுந்த நேர்மையாளர் என்றும்,ஈழ அரசியலில் விசாலப் பார்வை கொண்டவர் என்ற நினைப்பிலுமே தோழர் சீமான் அவருக்கு நேர்காணல் அளித்திருப்பார் என்று நம்புவோமாக!
பிபெர்நாட் ஒரு சந்தர்ப்பவாதி.வருமானம் வருகிறது என்றால் அவரது நாக்கு எதையும் கேட்கும்,பேசும்!அவர் சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக வேலை பார்த்தபோது,வரிசையாக தி.மு.க.வின்  அல்லது பகுத்தறிவின் எதிர்த்தரப்பினரைக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பதில் பிரபலமானவர்..இருப்பினும் வயிறு பெருத்தது..தொந்தி பெருத்தது..பசி அதிகமாயிற்று..எங்கே போனால் வயிறார சோறு கிடைக்கும் என்றே அலையும் ஒரு நாடோடியைப்போல அலைந்த ரபிபெர்னாட்டிற்கு ஜெயலலிதா அம்மையாரின் அன்னதானத் திட்டம் மனம் குளிரச் செய்துவிட்டது போலும்!அதனாலேயே ஜெயா தொலைகாட்சி குழுமத்தில் தஞ்சமடைந்து இன்றளவும் பசியறியாமல் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.அப்படிப்பட்ட பிரகஸ்பதியான ரபிபெர்னாட்டை ஒரு பெரிய அறிவாளி என்றோ,ஈழப் போராளிகளின் அபிமானி என்றோ..தவறான கணிப்புக்கு வந்ததன் விளைவாகவே தோழர் சீமான் மேற்படியாளருக்கு நேர்காணல் உரையாடலளிக்க சம்மதித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது.
வ்வுரையாடலில் சீமான்,தன்னுடைய மிகப் பெரிய ஐயப்பாடாகவும் விடை தெரிய வேண்டுமென்ற எண்ணத்திலும் தமிழ்நாட்டு முதல்வரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.இறையாண்மை அதாவது, இந்திய இறையாண்மை என்றால் என்ன? அதுபற்றி தனக்கொன்றும் தெரியவில்லை என்றும்,முதல்வர் இக்கேள்விக்கு விளக்கமான பதிலைச் சொல்ல வேண்டுமென உரையாடியிருக்கிறார்.இதற்க்கு முதல்வர் அளவிலான பெரிய மனிதர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை,தனிப்பட்ட முறையில் முறையில் ரபிபெர்னாட்டிடம் கேட்டிருந்தால்கூட சொல்லியிருப்பார்.
ஒரு தாய் தன் மகனைப் பார்த்து இன்னார்தான் உன் தகப்பன் என அடியாளம் காட்டும்போது,அத்தாயிடம் குறுக்குக் கேள்விகளேதும் கேட்காமல் அவள் சொல்வதை அப்படியே நம்பி அடையாளப்படுத்தப்பட்ட நபரை தன தந்தையாக அவரை ஏற்றுக் கொண்டு நேசிப்பதுதான் இறையாண்மை என்பது.வீடும் தேசமும் ஒன்றுதான்.அவ்வகையில் தேசத்தின் வார்த்தைகளை நம்ப வேண்டும்.இதுதான் தேசிய இறையாண்மை.தேசத்தின் வார்த்தைகள் என்றால் என்ன?நாட்டை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்,நாட்டுக்கான பாதுகாப்பு கட்டுமானங்கள்,நாடு சிதறுண்டு போகாமலிருக்க உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் சில கூறுகளை உள்ளடக்கிய சட்டங்கள் செயல்படுத்த தேசத்தை தேசத்தை ஆளும் தலைவர்கள்.முனையும்போது அதற்குப் பூரண ஒத்துழைப்பு நல்குவதே தேசிய இறையாண்மை எனக் கருதப்படுகிறது.ஆக...இதைப் படிக்கும் தோழர் சீமானுக்கு இறையாண்மை பற்றிய ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புவோம்.
அடுத்து..அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது செல்லாது என்றும்,சிறைப்படுத்தியது தவறு என்றும் நீதிமன்றம் சொல்லிவிட்டதாம்! அதனால் தன்னைக் கைது செய்ததற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே தீரவேண்டுமென்று கொக்கரிக்கிறார் சீமான்.சீமான் போன்ற கால்வேக்காட்டு அரசியல்வாதிகள் இன்னும் நிறைய கற்றுத் தேறவேண்டும்..பக்குவப்படவேண்டும்..அனுபவப்படவேண்டும்.
நமது இந்திய பீனல் கோர்ட் சட்ட நடைமுறையும்,வழக்காடுதலும்,தீர்ப்புமுறைகளும்,திறமையாக வாதாடுதல்,வெற்றிபெறுதல் என்றக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன.அடர்க்குக் காரணம்,ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதிக்கூட தண்டிக்கப்படக்கூடாது,என்ற உயரிய கொள்கையேயாகும்.அவ்வகையில் சீமான் போன்ற எத்தனயோ குற்றவாளிகள் தப்பியிருக்கலாம்...அதற்க்கெல்லாம் நொட்டாங்கு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.இயக்குனர் தங்கர்பச்சான் முதல்வரைச் சந்தித்து பேசி சீமானுக்காக பரிந்து பேசினார்..முதல்வரும் மனமிரங்கினார்.அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுத்தமான வாதங்கள் வைப்பதை நிறுத்திகொண்டனர்.எனவே சீமான் வெளியே வந்துவிட்டார்.அவ்வளவுதான்.தங்கர்பச்சானை சிறைக்கு அழைத்து சந்தித்து,முதல்வரை சந்தித்துப் பேசுங்கள் எனச் சொல்லிவிட்டு,அவர் முதல்வரை சந்தித்து விட்டார்...முதல்வரும் விடுதலைக்கு சம்மதித்துவிட்டார் எனத் தெரிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே சும்மனாங்காட்டியும் வெளிப்பூச்சாக தங்கரைக் கண்டித்து கடித நாடகம் ஆடியவர்தானே சீமான்.
சிரிப்புதான் வருகிறது...சீமானை மாதிரி எத்தனை அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறது தமிழகம்!
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதே இறையான்மை பிரச்சினை காரணமாக வைகோ உள்ளிட்ட எட்டுபேரை பொடா சட்டத்தில் கைது செய்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார்.அப்போ சீமான் என்ன புட்டிபால் குடித்துக்கொண்டிருந்தாரா...? பொடா கைதை எதிர்த்துப் பேச அன்று கலைஞரைத் தவிர ஒரு நாதியும் இல்லையே..ஒரு ஐந்தாண்டு மாற்றத்திற்குப் பின் குறுகிய காலத்தில் அரசியல் அறிவும்,ஆர்வமும் சீமானுக்கு எப்படி வந்தது..?ஏன் வந்தது..?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் தற்காலிகமாக இலங்கை ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாளில் தமிழக அரசு சொன்னது.அப்போது சீமான் கலைஞரால்தான் போர் நிறுத்தம் அறிவித்தேன் என ராஜபக்சே சொல்லட்டும்!அப்போதுதான் நம்புவோம் என்றார்.இவர் பிரபாகரனைச் சந்தித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.இப்பொழுது,தான் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கை தொடரில் மேதகு பிரபாகரனோடும்,மற்ற தலைவர்களோடும் அடிக்கடி அளவளாகி மகிழ்ந்ததாகி வேறு எழுதுகிறார்!ஆனால் பிரபாகரனைச் சந்தித்ததாக சொல்வது பொய்.சந்தித்தபோது எடுத்தப் படமாகக் காட்டுவது கிராபிக்ஸ் படம் என்று சொன்னால் அதற்க்கு சீமான் என்ன சொல்வார்?எப்படி நிரூபிப்பார்? "சீமான் என்னை வந்து சந்தித்தார்" என்று பிரபாகரன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா..?அல்லது நடேசன் சொல்லியிருக்கிறாரா..? இவர்கள் அப்படி ஒன்றும் சொல்லாதபோது,சீமான் சொல்லுவதை மட்டும் எப்படி நம்புவது?ஆக...ஏதாவது சொல்லி தமிழ்மக்களை ,இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் மொழி இன உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற பகல்கனவின்  விளைவாகவே சீமான் போன்றவர்கள் திடீர் புலி ஆதரவு நிலைபாடு எடுத்து பிரபாகரனை சந்தித்ததாக கதையளந்து மக்களை ஏமாற்றித் திரிக்கின்றனர் என்றால் இதை மறுக்க,வலுவான ஆதாரமேதும் சீமானால் காட்ட முடியுமா..?
இவர் பிரபாகரனை சந்தித்தார் என்றால் எப்படி சந்தித்தார்..இலங்கைக்குப் போக விசா எப்போதுப் பெற்றார்.அது பெறவில்லை என்றால்..சென்றதும் உண்மை என்றால்..கள்ளத்தனமாக வெளிநாடு சென்றது குற்றமாகாதா?அதற்க்காகவுமல்லவா இவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்.இவர் மீனவர்களுக்காக போராடுகிறாராம்!மீனவர்களுக்கு கடலில் எல்லை தெரியவில்லையாம்..மீனவர்களை யாராவது அடித்தால் இவர் திருப்பி அடிப்பாராம்..தமிழ்நாட்டு அரசாங்கத்தை வேசிமகன் அரசாங்கம் என்பாராம்.இப்படியெல்லாம் பேச சொல்லித்தான் பிரபாகரன் சொல்லிக் கொடுத்திருப்பாராக்கும்...
பிரபாகரன் ஒரு போராளி! விடுதலைப் போராளி!!விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை நிர்மாணித்து போர்க்களம் மட்டுமின்றி நிர்வாக ஆட்சியல் நடைமுறையிலும் அவ்வியிக்கத்தை நடைபோடவைத்தவர்.உலக ஆட்சியாளர்கள் அனைவரையும் அச்சத்துடனும்,நன்மைதிப்புடனும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்.இவ்விதம் ஒரு போராளித் தலிவராக வளர அவர் பிறந்த ஈழ மண்ணே பெரிய காரணம்.ஆனால்,சீமான் எஸ்.பி.மெய்யரசு போன்றோர் பிறந்து வளர்ந்தது இந்திய தமிழ் மண்ணில்.இங்கே முத்துவேலர் கருணாநிதி என்பவர் மாணவர் பருவத்திலேயே கையெழுத்திதழ் நடத்தினார்.பகுத்தறிவு பாதையை தேர்வு செய்தார்.திரைப்பட,நாடக கதை வசனம் எழுதினர்.அண்ணாவின் பின்னால் அணி சேர்ந்தார்,மாணவர்களை சேர்த்துக்கொண்டு தாய்மொழி காக்க இந்தியை எதிர்த்தார்,மனிதனை மனிதனே இழத்துச் சுமக்கும் கைரிக்ஷாவை ஒழித்தார்,இந்தியாவில் அனைத்து மாநில முதல்வர்களும் தங்களின் கரங்களால் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்,சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்தார்.இவ்விதம் முத்துவேலு கருணாநிதி பெயர் பெற இந்திய தமிழ்மண்ணே காரணம்.வேலுபிள்ளை பிரபாகரன் பாதை வேறு..முத்துவேலர் கருணாநிதி பாதை வேறு...இருவரையும் ஒப்பிட்டோ அல்லது ஆய்வு செய்தோ சீமான் போன்றவர்கள் குழப்பக் கொள்ளக் கூடாது. சமீபத்தில் அமெரிக்க இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளம் விடுதலைபுலிகள் விவகாரம் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி,கடந்த 2004ஆம் ஆண்டு சுமார் 4000 துருப்புகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய கர்ணாவை அப்போதைய சந்திரிகா அரசு பாதுகாப்புக் காரணத்திற்க்காக தமிழ்நாட்டிற்குதான் அனுப்பி வைத்தாராம்.அப்போது இங்கே முதல்வராய் இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்தான்.மேலும் சென்னை,நீலகிரி எஸ்டேட் போன்ற இடங்களில் கர்ணா அண்ட் கோ'வினர் மிகமிக பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.2006இல் ஜெயலிதா அம்மையார் ஆட்சி முடிவுற்று தி.மு.க.ஆட்சி தொடங்கிய பின்னர் இனிமேல் இங்கே சரிபட்டு வராதெனக்  கருதி அவசர அவசரமாக இலங்கை திரும்பியிருக்கின்றனர் கர்ணாவும் அவர் சகாக்களும்.இதுதான் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றத்தின் சுருக்கமான சாராம்சம்.விக்கிலீக்ஸ் செய்திகளை இதுவரை அமெரிக்கா அதிகாரபூர்வமாக மறுக்கவில்லை.ஆனால் ஹிலாரிகிளிண்டன் மூலமாக செய்திகளை மழுப்புவதும் சமாளிப்பதும் சமாதானம் செய்வதுமாகத்தான் இருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
ஆக துரோகி கர்ணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது ஜெயலலிதா அம்மையார்! போர் நிகழ்ந்தால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள் என்றது ஜெயலலிதா அம்மையார்..!பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்னதும் ஜெயலலிதா அம்மையார்தான்!இந்த லட்சணத்தில் இங்கே இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசிய சீமானெல்லாம் ஒன்று கர்ணாவின் கூலியாளாக இருக்க வேண்டும்! அல்லது இந்திய மண்ணில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்ற அந்நிய உளவு நிறுவனம் ஏதேனுமொன்ரின் ஏஜென்ட்டாக இருக்க வேண்டும்!எனவே சீமான் போன்றவர்களை உளவுத்துறை கண்காணிப்பிலேயே வைத்திருப்பது அவசியம்.மற்றபடி ரபிபெர்னாட் போன்ற நேர்காணல் நடத்துனர்கள்...பாவம் கூலிக்கு மாரடிப்பவர்கள் விட்டுவிடுவோம்.