Sunday, September 25, 2011

"ஜூனியர் காமராஜர்" சைதை துரைசாமி கூட அக்யூஸ்ட்டுதானா?

சென்னை மாநகர அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக "வாய்தா ராணி" ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சைதை துரைசாமி மீது பெண் ஒருவர் நில அபகரிப்பு புகார் கொடுத்தார். ஆனால் சைதை துரைசாமி அ.தி.மு.க. என்பதால் அவர் மீது ஒரு வழக்கு கூட "வாய்தா ராணி" ஜெயலலிதா போலீசார் பதிவு செய்யவில்லை. இதனால், அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமுதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி. மீதும், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார்.


அப்போது குமுதா சார்பாக வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, " அ.தி.மு.க. வைச் சேர்ந்த சைதை துரைசாமி மீது கடந்த ஏப்ரல் மாதம் நில அபகரிப்பு புகாரை குமுதா கொடுத்தார். இந்தப் புகார் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. எனவே, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி, "பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.







" கடந்த 5 மாதங்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நில அபகரிப்பு புகாரில் மற்றவர்கள் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்கள். அ.தி.மு.க. பிரமுகரான சைதை துரைசாமி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வரும் திங்கட்கிழமை போலீசார் பதில் அளிக்க இறுதி கெடு விதிக்கிறேன். ஏற்கனவே, மூத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்து இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு கெடு விதித்தேன். அப்போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என "வாய்தா ராணி" ஜெ. போலீசை கண்டித்தார்.

No comments:

Post a Comment