தமிழகம், புதுச்சேரி,கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதியை டெல்லியில் இன்று மாலை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே-16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் -13 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார். தமிழகத்தில் மார்ச் 19ம் தேதிவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார். தமிழகத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 54 ஆயிரம். தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment