Monday, March 21, 2011

'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?

 நாள்,வார ஏடுகள் சிலவற்றை எடுத்துக் கொள்வோம். தினமலர், தினமணி, ஆனந்த வ்கிடன்,ஜூனியர் விகடன்.குமுதம் ரிப்போர்ட்டர்,துக்ளக்,கல்கி முதலான சில ஏடுகள் தொடர்ந்து தி.மு.க.வையும்,திராவிட இயக்கத்தையும்,கலைஞரையும் தாக்கி எழுதி வருகின்றன.எப்படியாவது மீண்டும் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று துடிக்கின்றன.என்ன காரணம்?
 
மேலே குறிப்பிடப்பட்ட ஏடுகளின் வரிசையை மீண்டும் ஒருமுறை உற்று கவனித்தால் உண்மை புரியும்.அனைத்து ஏடுகளின் ஆசிரியர்களையும் ஒரு 'நூல்' இணைப்பது தெரிகிறதா?அந்த நூலுக்குப் 'பூணூல்'என்று பெயர்.தினமலர் ரமேஷ்,தினமணி வைத்தியநாதன்,விகடன் சீனிவாசன்,ரிப்போர்ட்டர் வரதராஜன்,துக்ளக் சோ,கல்கி ராஜேந்திரன் அனைவரும் பார்ப்பனர்கள்.அவாள் அனைவரும் ஒன்றுகூடி,அவாளில் ஒருவரைத் தமிழக முதல்வராக ஆக்க விரும்புவது இயல்புதானே!
 
அவர்களிடம் உள்ள 'இனப்பற்று' நம்மிடம் இல்லையே என்பதுதான் வேதனைக்குரியது.பார்ப்பனர் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என்று அவர்கள் விரும்போது,'தமிழாய்ந்த தமிழன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்'என்று நாம் விரும்பக்கூடாதா?
 
இது வெறும் தேர்தல் மட்டுமன்று.ஒரு வகையான சித்தாந்தப் போரும் ஆகும்.எனவேதான் இதனை ஆரிய திராவிடப் போர் என்கிறோம்  நாம்.'ஆம் இது ஒரு பரம்பரை யுத்தம்' என்று ஜெயலலிதாவும் ஒப்புக்கொள்கிறார். இந்தப் போரில் நாம் எந்தப் பக்கம்?
 
'நான் பெரியாரின் விரல் பிடித்து நடந்தவன்' என்று கூறும் கலைஞரின் பக்கமா?'நான் பாப்பாத்திதான்' என்று சட்டமன்றத்திலேயே கூறிய ஜெயலலிதாவின் பக்கமா?
 
பத்தாம் வகுப்பு வரை,தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதோடு,பொறியியல் கல்லூரிகளிலும்,தமிழ்வழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கலைஞரின் பக்கமா?ஆங்கிலக் கல்விதான் சிறந்தது என்று அறிக்கைவிட்ட  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னிரிமை வழங்கப்பட்டிருப்பது கலைஞர் அரசில்தான்.இது தமிழுக்கும்,தமிழருக்கும் பொற்காலம் என்று ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களே பாராட்டுவதைப் பார்க்கின்றோம்.
 
மேலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழின் பெருமையை உலகறியச் செய்த கலைஞரின் பக்கமா?கண்ணகி  சிலையை  கூட, காணாமல்  அடித்த  ஜெயலலிதாவின் பக்கமா?
 
தமிழறிஞர்களின் நூல்களையெல்லாம் தொடர்ந்து நாட்டுடைமை  ஆக்கி வரும் கலைஞரின் பக்கமா?தமிழின உணர்வாளர்களையும்,தமிழ் அறிஞர்களையும் சிறையில் அடித்த ஜெயலலிதாவின் பக்கமா?
 
இஸ்லாமியப் பெருமக்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடும்,அருந்ததியப் பெருமக்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கிய கலைஞரின் பக்கமா?சிறுபான்மையினருக்கு ஆந்திர அரசு இட ஒதுக்கீடு  வழங்கியதையே  கொச்சைப்படுத்திப் பேசிய ஜெயலலிதாவின் பக்கமா? 
 
இவை போன்ற ஆயிரம் உண்மைகளை உலகுக்குச் சொல்லவேண்டிய ஊடகங்கள் தவறான பரப்புரைகளின் ஆகலாமா? ஆகவே
சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!!
நமது சின்னம் உதயசூரியன்!!!
 

1 comment:

  1. அருமை. தேர்தலுக்கு இது பயன்படும்

    ReplyDelete