Sunday, January 9, 2011

ஆ.தி.மு.க.கூட்டணி உருவாகிவிட்டது;அதன் அராஜகமும் அட்டூழியமும் ஆராம்பமாகிவிட்டன!

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது ஜெயலலிதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு இடதுசாரிகளும் ம.தி.மு.க.வினரும் அவையின் விதிமுறைகளை மீறி அமளியில் ஈடுபட்டார்கள்.அவர்களை அவையிலிருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
பேரவை தலைவரின் துச்சமாக மதித்த அவர்கள்,தங்களை வெளியேற்ற வந்த அவைக் காவலர்களையும் அடித்து உதைத்து இருக்கிரர்ர்கள்.எதிர்கட்சிகளின் இந்தஅராஜகங்கள்,அட்டூழியங்களுக்கு என்ன காரணம்?அவர்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்து விட்டார்கள் என்பது தவிர வேறு என்ன?
ஜெயலலிதாவிற்கு ஜனநாயக அரசியலை விட வன்முறைகள்,காலித்தனங்கள்,கலவரங்கள் நடத்துவதிலேயே அசாத்தியமான.
அரசியலில் வெற்றி பெற வன்முறைகளே பெரிதும் உதவும்படியாக இருக்கும் என்பதிலும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
1983 இல் அவர் ஆ.தி.மு.க.வில் சேர்ந்து முழுநேர அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.அதிலிருந்து ஒவ்வொரு சமயத்திலும் வன்முறைகளை 
கட்டவிழ்த்து விடுவது,எதிரிகள் மீது அபாண்டமாகக் கொலைப் பழிகளைச் சுமத்துவது என்பதிலேயே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
வி.என்.ஜானகிஅம்மையாரின் ஆட்சியை சட்டசபையில் அடிதடி கலவரம் நடத்தி அதன் மூலமே ஆட்சியையும் கவிழ்த்த 'பெருமை'அவருக்குண்டு.தி.மு.கழக ஆட்சியில் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரை பார்த்து 'குத்துங்கடா அவனை' என்று வெறிக் கூச்சலிட்டு கலவரத்தைத் தூண்டி விட்டு,என் புடவையை பிடித்து இழுத்தார்கள் என்று விஷமப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டவர் அவர்.நாவலரை எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம் என்று பழி தூற்றியவர்.திருநாவுக்கரசு போன்ற ஆ.தி.மு.க வின்  4 தலைவர்களை தெருநாய்கள் என்று அர்ச்சித்தவர்.
கலைஞர்,மூப்பனார்,ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தன்னைக் கொலை செய்ய முயர்ச்சித்ததாக பழி தூற்றியவர் அவர்.வக்கீல் விஜயனின் காலை வெட்டவும்,வக்கீல் சண்முகசுந்தரத்தின் 
கை விரல்களை வெட்டவும்,ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின்  முகத்தில் ஆசிட் வீசவும் காரணமானவர் என்றும் பல்வேறு  குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் அவர்.அப்படிப்பட்ட அராஜகியுடன் கூட்டு சேர்ந்து விட்டார்கள் இடதுசாரிகள் என்பதையே ஆளுநர் உரையின்போது அவர்கள் ஆ.தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு நடத்திய வன்முறையும்,கலவரமும் எடுத்துகாட்டுவனாக அமைந்துள்ளன.
இனி தேர்தலுக்கு முந்தைய - வரும் மூன்று மாதங்களிலும் தேர்தலின் போதும் இவர்கள் அராஜகி ஜெயலலிதாவுக்கு உதவும் வகையில் வீதியில் இறங்கி வன்முறை வெறியாட்டம் நடுத்துவார்கள்.தமிழக சட்டம் ஒழுங்கைக் குலைக்க தகாத போக்குகளைக் கையாள்வார்கள் என்பதற்கு ,ஆளுநர் உரையின்போது அவர்கள் நடத்திய சட்ட விதிகளுக்கு முரணான வன்முறை வெறியாட்டங்கள் கட்டியங்கூறுவனவாக அமைந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் என்ன?

No comments:

Post a Comment