Thursday, June 30, 2011

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு

 கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் அதிகபட்சமாக இரண்டு அடுக்கு  மாடிக் கட்டடங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால்  ஜெயலலிதாவும் அவரது அமைச்சரவைச் சகாக்களும் இனைந்து, அங்கு 7  மாடிகளைக் கொண்ட ஆடம்பர சொகுசு ஹோட்டலைக் கட்ட  அனுமதி  வழங்கினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரா.கிருட்டிணன்,பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு,கட்டட விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்ததற்காக  ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் 4'பேருக்கும் தனித் தனியாக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், மாநிலம் முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுல்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது, தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி என்ற இடத்தில், மாணவிகள் வந்த பேருந்தை மறித்து,தீ வைத்து அ.தி.மு.க.வினர் எரித்தனர். இதில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்திரி ஆகிய மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.பிளசன்ட் ஸ்டே வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார்.

Tuesday, June 28, 2011

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி மறுப்பு : மனமுடைந்த பயனாளி வீரகுமார் தீக்குளிப்பு!

இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவனூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி நிறுத்தப்பட்டதால் மனமுடைந்த ஏழைத் தொழிலாளி வீரக்குமார் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று  வரும் அவரை பல்வேறு முன்னணியினர் சந்தித்து  ஆறுதல்  கூறி வருகின்றனர்.
இளையான்குடி ஒன்றியம்  தெற்கு விசவநூரைச் சேர்ந்தவர் சி.வீரக்குமார். இவருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்பட்டு முதல்  தவணையாக ரூ. 10,900 மும் இரண்டாவது தவணையாக ரூ. 7,400 ம்  வழங்கப் பட்டது.கடன் வாங்கி வீடு காட்டியதாலும் மீதமுள்ள அரசுத் தொகை  நிறுத்தப் பட்டதாலும் மனமுடைந்த வீரக்குமார் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளித்தார். அதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்  அவரைக்  காப்பாற்றி இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  

சொம்பு தூக்கிகளுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறோம்

  • 'இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உடனடியாக  இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு  மத்திய  அரசு  உடனடியாக  நடவடிக்கையை  மேற்கொள்ள  வேண்டும் என்று  இச்சட்டப்பேரவை  வலியுறுத்துகிறது.
 
  • விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

  • ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம்,ராஜீவ் காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும்,அதன் தலைவர் பிரபாகரனும் சம்மந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு,பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்."

16-4-2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை சொம்பு தூக்கிகளுக்கு  நினைவுபடுத்த விரும்பிகிறோம்.

Tuesday, June 21, 2011

டான்சி நில ஊழல் வழக்கு

ஜெயலலிதா முதலைமச்சராக இருந்தபோது, தாம் பங்குதாரராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திர்க்காகத் தமது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடான வழிகளில் வாங்கினார். இதனால் அரசுக்கு 3 .5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு

தமிழகம் மழுவதும் உள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு 45 ,302 வண்ணத் 
தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கானஒப்பந்தம் அளிப்பதற்காக ரூ.8 .5 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

Monday, June 20, 2011

ஜெயலலிதா பல முதல்முதலுக்கு சொந்தக்காரர்!

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும் தமிழகத்தின் தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா பல முதல் முதலுக்கு சொந்தக்காரர்  ஆவார்.நடிகையாக இருந்த ஜெயலலிதாதான் அரசியல்வாதியாக மாறிய தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராவார்.அதே நேரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதலாவது முதலமைச்சரும் இவர்தான்!

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு மட்டும் 1996ஆம் ஆண்டில் மூன்று தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக மட்டும் 12 பெரிய ஊழல் வழக்குகள் இருந்தன.ஜெயலலிதாவின் நெருங்கிய  தோழி சசிகலா,முன்னாள் அமைச்சர்கள்,தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரின் மீது மொத்தம் 33வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய போராட்டமும் அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்புகளும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்கையை பெரிதும் பாதித்தன.இதில் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டும்,இன்னும் சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்!

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு,டான்சி நில ஊழல் வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, திராட்சை வருமானவரி வரி வழக்கு, மேனா விளம்பர, நிறுவன வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு மற்றும்   வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு. பிறகு சசிகலாவின் மேல்: அந்நியச் செலவாணி விதி மீறல் வழக்கு, ஜெஜெ டி.வி.வழக்கு. கறுப்புப் பண முதலீடு வழக்கு, வெளிநாட்டு முதலீடுகள் வழக்கு என மொத்தம் 12  வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டது.



ஒவ்வொரு வழக்கின் நிலையையும் தனித் தனி பதிவாக இடப்படும் (தொடரும்)