Thursday, October 13, 2011

சென்னை மேயர் கழக வேட்பாளர் - கழக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கோரி தென்சென்னை மாவட்ட தி.மு.க.சார்பில் திருவான்மியூரில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம்! தலைவர் கலைஞர் பேருரையாற்றுகிறார்!


தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து இன்று ( 14 - 10 - 2011)  மாலை திருவான்மியூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேருரையாற்றுகிறார்.
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெருவ தறிவோம். இத்தேர்தலில் திராவிட இன மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திட, நல்வாழ்வு தந்திட கழகம் தனித்தே போட்டியிடும் என தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த கால கழக அரசுகள் மாநிலத்து மக்களுக்கு ஆற்றிய எண்ணிலடங்கா நலப்பணிகளை மக்களிடம் எடுத்து ரைத்து களம் காண்பது என்ற நெஞ்சுரத்துடன் கழகம் இந்த தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு, இத்துணை வயதிலும் தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேருரையாற்றி வருகிறார்.

உழைப்பிற்கே ஒரு பெரும் உதாரணமாகத் திகழும் உத்தமத் தலைவர்!

உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமது எழுபதாண்டுகளுக்கும் மேலான நெடிய அரசியல் பொது வாழ்வில் ஓய்வு ஒழிச்சலில்லா உழைப்பினை சிந்தி தம்மையே இந்த இனத்திற்காக அர்பணித்துப் பாடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை திருவெற்றியூர் பெரியார் நகரில் திருவள்ளூர் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்போல் திரண்டிருந்த மக்களிடையே, கழக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக வார்டு வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு ஏறத்தாழ ஒரு மணிநேரம் எழுச்சியுரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்.

Sunday, September 25, 2011

"ஜூனியர் காமராஜர்" சைதை துரைசாமி கூட அக்யூஸ்ட்டுதானா?

சென்னை மாநகர அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக "வாய்தா ராணி" ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சைதை துரைசாமி மீது பெண் ஒருவர் நில அபகரிப்பு புகார் கொடுத்தார். ஆனால் சைதை துரைசாமி அ.தி.மு.க. என்பதால் அவர் மீது ஒரு வழக்கு கூட "வாய்தா ராணி" ஜெயலலிதா போலீசார் பதிவு செய்யவில்லை. இதனால், அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமுதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி. மீதும், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார்.


அப்போது குமுதா சார்பாக வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, " அ.தி.மு.க. வைச் சேர்ந்த சைதை துரைசாமி மீது கடந்த ஏப்ரல் மாதம் நில அபகரிப்பு புகாரை குமுதா கொடுத்தார். இந்தப் புகார் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. எனவே, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி, "பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.







" கடந்த 5 மாதங்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நில அபகரிப்பு புகாரில் மற்றவர்கள் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்கள். அ.தி.மு.க. பிரமுகரான சைதை துரைசாமி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வரும் திங்கட்கிழமை போலீசார் பதில் அளிக்க இறுதி கெடு விதிக்கிறேன். ஏற்கனவே, மூத்த போலீஸ் அதிகாரிகளை நியமித்து இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு கெடு விதித்தேன். அப்போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என "வாய்தா ராணி" ஜெ. போலீசை கண்டித்தார்.

Sunday, September 4, 2011

தி.மு.க.முப்பெரும் விழா 30.9.2011

தி.மு.க.முப்பெரும் விழா 30 .9 .2011 அன்று
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்


2011 - ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வேலூரில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி தற்போது தேதி மாற்றம், இடமாற்றம் செய்யப்பட்டு, வருகிற 30.9.2011 - வெள்ளிகிழைமை, சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.


நாள் : 4 .9 .2011
தலைமைக் கழகம்
தி.மு.க.

தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமைக் கழக அறிவிப்பு
 
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் - அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கைது தொடர்பாகவும்;கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தலைமைக் கழகத்திற்கு தொடர்பு கொள்ளும் வகையில் பின்வருமாறு நியமனம் செய்யப்படும் தலைமைக் கழக பொறுப்பாளர்கள், தலைமைக் கழகத்தில் முழு நேரமும் பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்
 
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.
 
பெ.வீ.கல்யாணசுந்தரம்
 
ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி
 
அ.ரகுமான்கான்
 
வே.இரவி
 
இரா.கிரிராஜன்
 
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
 
க.அன்பழகன்
பொதுச்செயலாளர்
தி.மு.க.
"அண்ணா அறிவாலயம்"
சென்னை - 18
நாள் : 4 .9 .2011 

Friday, July 22, 2011

தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு - பொதுக்குழு கூடுகிறது : இன்றும் நாளையும் நடைபெறுகிறது !

இது குறித்து பொதுச் செயலாளர் பேராசிரியர்  வெளியிட்டுள்ள  அறிவிப்பு வருமாறு:-
 
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இன்று 
23 .7 .2011 (சனிக்கிழைமை) மாலை 4 .00 மணியளவில் 
தி.மு.க.செயற்குழு கூட்டம் மற்றும் நாளை 24 .7 2011  (ஞாயிற்றுக் கிழைமை) காலை 10 .00 மணியளவில்  தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோவை மாநகர், திருச்சி ரோடு, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அறிஞர் அண்ணா வளாகத்தில் நடைபெறும்.
 
அதுபோது தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 
பொருள் : கழக ஆக்கப் பணிகள்
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்
தி.மு.க.

Monday, July 11, 2011

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு

1993 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனத்திட மிருந்து,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 20 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் அரசுக்கு 6.5கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா உள்ளிட்ட 10பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் இணைந்து கூட்டாக சதி செய்து தரம் குறைந்த நிலக்கரியைத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இறக்குமதி செய்து பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அதன்பின், சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.ஆனால்,அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.சி.லகோட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை எதிர்கொள்ளும்படி ஜெயலலிதாவுக்கு ஆணையிட்டது.

Sunday, July 3, 2011

சில ஏடுகளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து - ஒரு விளக்கம்!

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் 
பொறியியல் கல்லூரியில் சேரலாம்
என்கிற விதிமுறையை கலைஞர் அரசுதான் அன்றைக்கு ஏற்படுத்தியது!
"எஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியதற்கு சென்னை ஐகோர்ட் தடை -ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி" என்று "தினத்தந்தி"நாளேடு கோட்டை எழுத்துகளில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள்,முதல் முறையாக பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தி.மு.க.அரசுதான்.

பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் என்று விதிமுறை ஏற்படுத்தியது தி.மு.க.அரசுதான்.

2008 - 2009 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க.அரசு அனைத்துப்  பிரிவினருக்கும்  குறைத்து  ஆணையிட்டதன்படி,பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 விழுக்காடு என்பதை 50  விழுக்காடு  எனவும் பிற்படுத்தப்பட்ட  கிறித்தவ வகுப்பினர்,பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம்  வகுப்பினர்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  மதிப்பெண்கள் 50 விழுக்காடு என்பதை 45 விழுக்காடு எனவும்-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 விழுக்காடு என்பதை 40 விழுக்காடு எனவும்-பட்டியல்  இனத்தவர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 விழுக்காடு எனவும் தி.மு.க.அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் 50 சதவிகிதமும், இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச்  சார்ந்த மாணவர்கள் 45 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்  என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் பொதுத் தேர்தலுக்கு முன்பே ஓர் அறிவிப்பினைச் செய்தது.

அந்த அறிவிப்பு வந்ததும்,தமிழக அரசின் சார்பில் தி.மு.க.அரசு இருந்தபோதே  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு -அதனை தமிழகத்தில்  இந்த ஆண்டு அமல்படுத்தமாட்டோம்  என்று முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்  அறிவித்ததோடு,மத்திய அரசுக்கு அது பற்றி திட்டவட்டமாக அப்போதே  தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜெயலலிதாதான் மத்திய அரசின் அறிவிப்பினை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததைப் போலவும், சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு விட்டது போலவும் செய்தி வெளியிட்டதோடு,  அதற்காக ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி  தெரிவித்ததாகவும் சில ஏடுகள் அதை மிகைப்படுத்தி  புகழ்ந்திருக்கின்றன.
ஆனால் இட ஒதுக்கீட்டின் கீழே பொறியியல் கல்லூரியில் நுழைய விரும்புகின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து அவர்களை அந்தக் கல்லூரியிலேயே பயில வசதி செய்தி கொடுத்தது தி.மு.க.அரசுதான் - முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தான் என்பதை அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

நன்றி : முரசொலி